சென்னை லயோலா கல்லூரி மக்கள் ஆய்வகம் மற்றும் ஊடகக் கலைகள் துறை எம்.ஏ. பட்டப்படிப்பு மாணவர்கள் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையில் தமிழ்நாடு முழுவதும் மக்களவை தேர்தல் குறித்து கருத்துக் கணிப்பு நடத்தினார்கள்.

 

 39 தொகுதிகளிலும் கடந்த 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடந்த இந்த ஆய்வில், தொகுதிக்கு 150 பேர் வீதம் 5 ஆயிரத்து 850 பேரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. எந்த கூட்டணிக்கு அதிக வாய்ப்பு என்பது குறித்தும் கருத்துக்கள் அறியப்பட்டன. இதன் முடிவுகளை பேராசிரியர் ராஜநாயகம் இன்று வெளியிட்டார். அதை அகில இந்திய கத்தோலிக்க பேரவை ஆலோசகர் ஹென் ஜெரோம் பெற்று கொண்டார். அதன் விவரம் வருமாறு:-

 

 இன்றைய நிலையில், மக்களவை தேர்தலில்

திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று 34.5 சதவீத வாக்காளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதில்

  • திமுகவுக்கு 26.5 சதவீதமும்,
  • காங்கிரஸ் கட்சிக்கு 6.4 சதவீதமும்,
  • விடுதலை சிறுத்தைகளுக்கு 1.2 சதவீதமும்,
  • முஸ்லீம் லீக் கட்சிக்கு 0.4 சதவீதமும்

ஆதரவு கிடைத்துள்ளது.

 

 அதிமுக அணி வெற்றி பெறும் என்று 34.9 சதவீத வாக்காளர்கள் கூறி உள்ளனர்.

இதன்படி

அதிமுக அணிக்கு 0.4 சதவீதம் ஆதரவு அதிகம் உள்ளது.

இதில்

  • அதிமுகவுக்கு 27.3 சதவீத ஆதரவும்,
  • மதிமுகவுக்கு 2.4 சதவீதமும்,
  • பாமகவுக்கு 3 சதவீதமும்,
  • மார்க்சிஸ்டு கட்சிக்கு 1.2 சதவீதமும்,
  • இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 1 சதவீதமும் ஆதரவும்

இருக்கிறது.

பாரதீய ஜனதா அணியில் பாஜனதாவுக்கு 3.1 சதவீத ஆதரவும்,

சமத்துவ மக்கள் கட்சி சேர்ந்தால் அதற்கு 0.4 சதவீத ஆதரவும் இருப்பது தெரிய வந்துள்ளது.

தனித்து போட்டியிடும் தே.மு.திகவுக்கு 12.3 சதவீத வாக்காளர்கள் ஆதரவு இருக்கிறது.

 

 மற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைகளுக்கு 1.7 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

1.1 சதவீத வாக்காளர்கள் எந்த கட்சிக்கும் ஓட்டுப் போடுவது என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை.

தமிழ்நாட்டில் கடந்த 3 வருடங்களாக நடந்து வரும்

திமுக ஆட்சி திருப்தியாக இருக்கிறது என்று 47.5 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

44.6 சதவீதம் பேர் அதிருப்தி இருப்பதாக கூறி உள்ளனர்.

காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சி திருப்திகரமாக இருந்தது என்று 43.3  சதவீதம் பேர் கூறி இருக்கிறார்கள்.

சரியில்லை என்று 42.08 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

 இலங்கை பிரச்சினையை தீர்ப்பது யார் என்ற கேள்விக்கு அதிமுக கூட்டணி என்று 32 சதவீதம் பேரும், திமுக கூட்டணி என்று 14.01 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

 பிரச்சினைகளை தீர்த்து வைப்பது திமுக அணி என்று அதிக வாக்காளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அகில இந்திய அளவில் வேலை இல்லா திண்டாட்டத்தை காங்கிரஸ் அணி தீர்த்து வைக்கும் என்று 22.4 சதவீதம் பேரும், பா.ஜனதா அணி தீர்க்கும் என்று 20.9 சதவீதம் பேரும், 3-வது அணிக்கு ஆதரவாக 19.6 சதவீதம் பேரும் கருத்து கூறி இருக்கிறார்கள்.

 

 விலைவாசி, மின்வெட்டு போன்ற பிரச்சினைகளில் தற்போது மக்களிடம் வேகம் இல்லை. இலங்கையில் தற்போது நடந்து வரும் போர் வாக்காளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 மத்திய-மாநில் அரசுகள் மீது பொதுமக்கள் ஆதரவும் எதிர்ப்பும் ஓரளவு சமமாக உள்ளது. ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ பெரிய அளவில் அலை எதுவும் இல்லை.