பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.

முதலிடம்:
திண்டுக்கல் மாணவி பிரேமசுதா, விருதுநகர் நகரைச் சேர்ந்த சிவகுமார் ஆகிய இருவரும் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். முதலிடம் பெற்ற பிரேமசுதா ராசிபுரம் எஸ்.ஆர்.வி எக்ஸெல் பள்ளி மாணவி ஆவார். முதலிடம் பெற்ற சிவகமார் விருதுநகர் பெரியவள்ளிக்குளம் நோபல் பள்ளி மாணவர் ஆவார்.

இரண்டாமிடம்:
498 மதிப்பெண்கள் பெற்று 50 மாணவர்கள் இரண்டாமிடம் பெற்றுள்ளனர்.

மூன்றாவது இடம்:
497 மதிப்பெண்கள் பெற்று 204 பேர் மூன்றாவது இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

2016-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 93.6 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 92.9 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதில் மாணவர்கள் 91.3 சதவீதம் பேரும், மாணவிகள் 95.9 சதவீதம் பேரும் தேர்ச்சி வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முடிவுகளை தெரிந்துகொள்ள இந்த இணையதளத்தை பயன்படுத்தவும்
http://tnresults.nic.in/isma.htm