சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

தென் மேற்கு பருவமழை காலம் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் இறுதி வரையாகும். இந்த மாதம் (ஆகஸ்டு) தொடக்கத்தில் இருந்தே தமிழ்நாட்டில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. கடந்த 2 வாரங்களாகவே தென் மேற்கு பருவமழை குறைந்துவிட்டது. அதாவது சராசரியை விட 70 முதல் 90 சதவீதம் வரை குறைந்துவிட்டது. ஆங்காங்கே ஓரிரு இடங்களில் சிறிய அளவில்தான் பெய்தது.
Beating-the-heat
மேலும் காற்றில் ஈரப்பதம் குறைந்து காணப்படுகிறது. கடல்காற்று தரையை நோக்கி வீசும்போது மிகவும் வலு இழந்து காணப்படுகிறது.