கடந்த ஐந்து வர்த்­தக தினங்­களில், மும்பை பங்­குச் சந்தை நிறு­வ­னங்­களின் பங்கு மதிப்பு வீழ்ச்­சி­யால், முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு, 8.50 லட்­சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்­பட்­டுள்­ளது.


நேற்று பங்கு வர்த்­த­கத்­தின் போது, சீனா, வரி உயர்வு தொடர்­பாக, அமெ­ரிக்கா உட­னான பேச்சை, ரத்து செய்து விட்­ட­தாக தக­வல் பர­வி­யது. இத­னால், சர்­வ­தேச வர்த்­த­கப் போர் மேலும் தீவி­ர­மா­கும் என்ற அச்­சத்­தில், முத­லீட்­டா­ளர்­கள், பங்­கு­களை விற்­பனை செய்­த­னர்.

இதன் கார­ண­மாக, மும்பை பங்­குச் சந்­தை­யில், 2,111 நிறு­வ­னங்­களின் பங்கு விலை, வீழ்ச்சி கண்­டது. இச்­சந்­தை­யின், ‘சென்­செக்ஸ்’ குறி­யீடு, 500 புள்­ளி­க­ளுக்­கும் மேலாக சரிந்­தது. ஐந்து வர்த்­தக தினங்­க­ளாக சரிவு தொடர்­வ­தால், மும்பை பங்­குச் சந்தை பட்­டி­ய­லில் உள்ள நிறு­வன பங்­கு­களின் சந்தை மதிப்பு, 8 லட்­சத்து,47 ஆயி­ரத்து, 974 கோடி ரூபாய் குறைந்து, 1 கோடியே,47 லட்­சத்து, 89ஆயி­ரத்து, 45 கோடி ரூபா­யாக சரிந்­துள்­ளது.