இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இருமியபோது அவரது தொண்டையில் இருந்த புற்றுநோய் கட்டி தானாக வெளியே வந்து விழுந்தது. இதனால் அந்தப் பெண் புற்றுநோயிலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளார்.

லண்டனைச் சேர்ந்தவர் கிளெய்ர் ஆஸ்பர்ன் (37). அவரது கணவர் கெவின்(53). லாரி டிரைவர். அவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிளெய்ர் தனது தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பது போன்று உணர்ந்தார். இதையடுத்து அவர் மருத்துவரிடம் சென்றார்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது தொண்டையில் புற்றுநோய் கட்டி இருப்பதாகவும், அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதும் கடினம் என்று தெரிவித்தனர்.

அப்படியே அறுவை சிகிச்சை செய்தாலும் அது வெற்றிகரமாக அமைய 50 சதவீத வாய்ப்பு தான் உள்ளதாக அவர்க்ள் தெரிவித்தனர். இதனால் கவலை அடைந்த கிளெய்ர் இருமியபோது தற்செயலாக அந்த கட்டி வெளியே வந்து விழுந்தது. இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். இதையடுத்து அவரை பரிசோதித்ததில் அவரது உடலில் புற்றுநோய் செல்கள் பரவவில்லை என்பது தெரிய வந்தது.

இருப்பினும் அவரது வாயில் இருந்த புற்றுநோய் செல்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. இதையடுத்து அவர் தற்போது நலமாக உள்ளார்.