இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்த மக்களில் 90 ஆயிரம் பேர் தங்களின் சொந்த வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகள் பிரிவு ஹைகமிஷனர் ஆன்ட்ரெஜ் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்

இலங்கையில் போர் உச்சகட்டம் அடைந்த சமயத்தில் சுமார் இரண்டு லட்சத்து 74 ஆயிரம் பேர் தங்கள் சொந்த வீடுகளில் இருந்து இடம் பெயர்ந்தனர்.

அவர்களை, மீண்டும் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பும் பணிகளை இலங்கை  அரசு  தற்போது துரிதப்படுத்தியுள்ளது. கடந்த 2 வாரங்களில் மட்டும் 39 ஆயிரம் பேர் சொந்த வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

யாழ், முல்லைத்தீவு, திரிகோணமலை, மன்னார், மட்டக்களப்பு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலானவர்கள் திரும்பிவிட்டனர். பொலன்னருவா மாவட்டத்திற்கும் சிறிதளவில் மக்கள் சென்றுவிட்டனர்.

இத்துடன், சுமார் 16 ஆயிரத்து 500 பேர் முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

அமெரிக்கப் பொருளாதாரம் சரியான திசையில் பயணிப்பதாக அதிபர் ஒபாமா சொல்லி வாய் மூடும் முன்பே, அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் 27 ஆண்டுகளில் காணாத உயர்வைக் கண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

unemploy_USஇந்த அக்டோபர் மாதம் மட்டும் வேலை இழப்பின் அளவு 10.2 சதவிகிதத்தை எட்டியுள்ளது.

அமெரிக்க தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி இந்த மாதம் மட்டும் 190,000 பேர் வேலை இழந்துள்ளனர்.

இது அமெரிக்க பொருளாதார நிபுணர்களின் கணிப்பைவிட 2 சதவிகிதம் அதிகம்.

“நிச்சயம் இது கவலைப்படத்தக்க விஷயமே. அமெரிக்க நிர்வாகம் உடனடியாக இதில் ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. புதிய நிதிச் சலுகைகளை அரசு அதிகரித்தாக வேண்டும்” என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் வேலை இழப்புகள் தொடர்ந்து 22 மாதங்களாக அதிகரித்தபடி உள்ளதுதான் ஒபாமா நிர்வாகத்தை பெரிதும் பயமுறுத்தி வருகிறது.

தன் நாட்டை கவனிப்பதை விட்டு விட்டு, அடுத்த நாட்டின் உள் விவகாரங்களில் மூக்கை நுழைத்து கொண்டிருந்த அமெரிக்காவிற்கு இது ஒரு சிறந்த பாடமாக அமையட்டும், அதே நேரத்தில், இந்த பாடங்களில் இருந்து திருந்தி, அடுத்த நாட்டில் சின்னாபின்னமாக ஆக்க செலவிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்,

அமெரிக்க பாடம் படிக்குமா! திருந்துமா!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், அரிக்கோடு – மூர்க்கநாடு இடையே சாலியாறு ஓடுகிறது. இதில் பள்ளி மாணவர்கள் பயணம் செய்த படகு ஒன்று கவிழ்ந்ததில், ஒரு மாணவி உட்பட எட்டு பேர் பலியான சம்பவத்தில் ஆற்றில் தத்தளித்த தன் சக மாணவர்கள் இருவரை காப்பாற்றி விட்டு, ஷமீம் என்ற மாணவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

 

அரிக்கோடு பகுதியிலிருந்து, இந்த ஆற்றை கடந்துதான் மாணவ, மாணவியர் மூர்க்கநாடு பள்ளிக்குச் செல்ல வேண்டும். சில நாட்களுக்கு முன் பள்ளி முடிந்து படகில் திரும்பியவர்களில் எட்டு பேர் பலியான சம்பவம், மாநிலத்தையே உலுக்கி உள்ளது. இச்சம்பவத்தில் பலியான, பிளஸ் 1 கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவர் ஷமீம் (16), படகு கவிழ்ந்ததும், ஆற்று நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த சக மாணவர் இருவரை, காப்பாற்றி கொண்டு வந்து கரையில் சேர்த்தார்.

சோர்வாக காணப்பட்ட அவரை, கரையில் இருந்த பிற மாணவர்கள் தடுத்தும், ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த மற்றொரு மாணவரைக் காப்பாற்ற நீரில் குதித்தார். அப்போது துரதிர்ஷ்டவசமாக நீரில் மூழ்கி இறந்தார். தன் உயிர் போனாலும், சக மாணவர்களை காப்பாற்றிய அவரது உறுதிமிக்க வீரத்தை, கிராமத்தினர் நெகிழ்ந்து கண்கலங்கினர்.

அமெரிக்கா, டெக்ஸாஸ் ஃபோர்ட் ஹுட் (Fort Hood) ராணுவ மையத்தில், ராணுவ மனோவியலாளர் சக ராணுவ வீரர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் மரணமடைந்தனர். மனோவியலாளர் உட்பட 30 பேர் படுகாயமுற்றனர். அமெரிக்கா மண்ணில் அதன் ராணுவ மையத்திலேயே நடைபெற்றுள்ள இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மேஜர் நிடால் மாலிக் ஹஸன் (Nidal Malik Hasan), 39 வயது,  அமெரிக்க ராணுவத்தில் மனநோய் மருத்துவராக சேவை செய்து வருகிறார். வெள்ளியன்று அமெரிக்கா போர் புரிந்து வரும் பகுதிக்கு பணியில் செல்ல இருந்தார். அவர் ஈராக்கிற்கு செல்ல இருந்தாரா அல்லது ஆப்கானிஸ்தானிற்கா என்பது பற்றி தெளிவான தகவல்கள் இல்லை. தனது அண்டை வீட்டிலுள்ள பேட்ரிஸியா வில்லா (Patricia Villa) என்ற பெண்மணியை வியாழனன்று அவரது இல்லத்தில் சந்தித்து, தான் வெள்ளியன்று போர் முனைக்கு பணிநிமித்தமாய் செல்வது தெரிவித்து விட்டு தனது வீட்டிலிருந்து சில பொருட்கள், ஒரு குர்ஆன் ஆகியனவற்றை கொடுத்துள்ளார்.

ராணுவ மையத்தில் போர் முனைக்கு செல்ல நியமிக்கப்பட்டிருந்த வீரர்கள் 300 பேர் வரை கண் பரிசோதனைக்காகவும், தடுப்பூசி பெறுவதற்காகவும் வரிசையில் நின்றிருக்கும் போது மாலிக் அங்கு சரமாரியாக சுட ஆரம்பித்திருக்கிறார். பலர் அடிபட்டு விழ சுதாரித்துக் கொண்ட சில வீரர்கள் பதிலுக்கு அவரை துப்பாக்கியால் சுட்டு அவரை செயலிழக்கச் செய்திருக்கின்றனர்.

இச்சம்பவம் குறித்து ராணுவ அதிகாரிகள் பலத்த அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். அவரின் இந்த செயலுக்கான காரணம் இன்னம் விளங்கப்படாமலிருக்கிறது. அவருடன் பணிபுரிந்த மாலிக் சில சமயங்களில் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் நடைபெற்று வரும் போர் குறித்து சில சமயங்களில் கோபம் வெளிப்படுத்தியுள்ளதாய் தெரிவித்துள்ளார். அவரின் ஓர் உயரதிகாரி மாலிக்கின் பணி ஈடுபாடு குறித்தும் நோயாளிகளிடம் அவர் காட்டி வந்த அபரிமிதமான அக்கறையையும் சிலாகித்துக் கூறியுள்ளார். இது நாள் வரை அவர் ராணுவத்திற்கு ஒரு மதிப்பு வாய்ந்தவரே என்று தான் கருதி வந்ததாக மற்றொரு ராணுவ மருத்துவ சேவை மையத்தின் அதிகாரி கர்னல் கிம்பர்லி கெஸ்லிங் (Kimberly Kesling) கருத்து தெரிவித்துள்ளார். அவரது பணியிலோ நடவடிக்கையிலோ இது வரை எந்தக் குறையுமே இல்லை என்று அவர் பணிபுரிந்த மருத்துவமனையிலுள்ள மற்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

”இந்தச் சம்பவத்தில் எந்த வெளி அமைப்பும் சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. ஒரு தனிப்பட்ட மனிதர் தனது சுய விருப்பத்திலேயே தனது சகாக்களை சுட்டுக் கொன்றுள்ள சம்பவமே இது” என்று உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் செயலாளர் ஜேனட் நெப்போலிடானோ (Janet Napolitano) கருத்துத் தெரிவித்துள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த விசாரனையை ராணுவம் முழு வீச்சில் முடுக்கிவிட்டுள்ளது. மாலிக் ஹஸன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வீட்டை கொள்யைடித்தது மற்றும் பெண்ணை கொலை செய்தது தொடர்பாக, ஒரு இந்தியர், இலங்கையைச் சேர்ந்த 2 பேருக்கு சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியரான முகமத் நவுசத், இலங்கை நாட்டைச் சேர்ந்த பன்டர் நிக்கார் மற்றும் ஹாலீமா அபூபக்கர் ஆகியோருக்கு இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முகமது நவுசத் கேரள மாநிலம் பட்டாம்பி என்ற இடத்தைச் சேர்ந்தவர்.

கடந்த 2005ஆம் ஆண்டு நவம்பர் சவூதி அரேபிய பெண் ஒருவரைக் கொலை செய்து ஆபரணங்களைத் திருடிய குற்றத்திற்காக இவர்களுக்கு இத்தண்டனை நிறைவேற்றபட்டுள்ளது.

பாலியல் வல்லுறவு, கொலை, ஆயுத முனை கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் போன்ற குற்றச் செயல்களுக்கு இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் சவூதி அரேபிய நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி வருகிறது.

ரஷியா சென்று திரும்பிய மோடி பன்றிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக பரிசோதனையில் உறுதியானது. இதைத் தொடர்ந்து காந்திநகரில் உள்ள அவரது இல்லத்தில் தனியறையில் வைத்து அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதனால், மோடி கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டன.

பன்றிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உடல்நிலை தேறிவருகிறார் என்று அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழு சனிக்கிழமை தெரிவித்தது.

 

மோடிக்கு காய்ச்சல் மற்றும் இருமல் குறைந்துள்ளது. அவர் ஒருவாரம் ஓய்வில் இருந்தால் முற்றிலும் குணமடைந்துவிடுவார். அவருடைய உடல்நிலை குறித்து கவலைப்படத் தேவையில்லை என்று மருத்துவ குழுவில் ஒருவரான அடூல் படேல் தெரிவித்தார்

 

 

தமிழகத்தில் இதோ, அதோ என்று போக்கு காட்டிய வடகிழக்கு பருவமழை, காலதாமதமாக துவங்கியுள்ளது. நீண்ட நாட்களாக கடும் வெயில் காய்ந்து வந்த நிலையில், திடீரென நேற்றைய வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. சென்னை நகரில் நேற்று பல பகுதிகளில், “சில்’லென மழை கொட்டியது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
rain showerபொதுவாக அக்டோபர் மாதம் பருவமழை துவங்கிவிடும். வடகிழக்கு பருவமழை, இந்தாண்டு அக்டோபர் 20ம் தேதி துவங்கும் என, டில்லி வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. ஆனால், குறித்த தேதி கடந்த பிறகும் மழை பெய்வதற்கான அறிகுறி தென்படவில்லை. தொடர்ந்து கடும் வெப்பநிலையே நிலவியது. கடும் வெயிலால் மக்கள் அவதிப்பட்டனர். கோடை காலம் கடந்தும், 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருந்தது. இந்நிலையில், நேற்றைய வானிலையில் திடீரென மாற்றம் ஏற்பட்டது. காய்ந்து கிடந்த சென்னை நகரில், நேற்று அதிகாலை குளிர்ந்த காற்றுடன் பல பகுதிகளில் மழை பெய்தது. சென்னை மட்டுமில்லாமல், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் பலத்த மழை பெய்தது. நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி, நுங்கம்பாக்கத்தில் 13 மி.மீ., மற்றும் மீனம்பாக்கம் 3 மி.மீ., மழை பெய்தது. இவ்வளவு நாளாக போக்குகாட்டிய பருவமழை, மிகவும் காலதாமதமாக துவங்கியுள்ளது. இதை, வானிலை ஆய்வு மைய அதிகாரிகளும் உறுதி செய்தனர்.
இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி குழந்தைவேலு கூறியதாவது: பொதுவாக வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ம் தேதி துவங்கும். 1984, 1988, 1992, 2000 ஆகிய ஆண்டுகளில் நவம்பரில் பெய்தது. பருவநிலை மாற்றத்தின் காரணமாக, வடகிழக்குப் பருவமழை துவங்கும் அறிகுறி இன்றி காணப்பட்டது. தற்போது, பருவமழை துவங்கி விட்டது என்பதன் அடையாளமாக, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. வங்காள விரிகுடாவில், வலு குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இதனால், அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை மட்டுமின்றி வடமாவட்டங்களில் லேசான மழை பெய்யலாம். வங்காள விரிகுடாவில் இந்த காற்றழுத்தம் மேற்கொண்டு வலுவடைந்தால், பலத்த மழையை எதிர்பார்க்கலாம். பருவமழை தாமதமாக துவங்கினாலும், இந்தாண்டு வழக்கமான மழை அளவு இருக்கும். இவ்வாறு குழந்தைவேலு கூறினார்.

தமிழகத்தில் இதோ, அதோ என்று போக்கு காட்டிய வடகிழக்கு பருவமழை, காலதாமதமாக துவங்கியுள்ளது. நீண்ட நாட்களாக கடும் வெயில் காய்ந்து வந்த நிலையில், திடீரென நேற்றைய வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. சென்னை நகரில் நேற்று பல பகுதிகளில், “சில்’லென மழை கொட்டியது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

பொதுவாக அக்டோபர் மாதம் பருவமழை துவங்கிவிடும். வடகிழக்கு பருவமழை, இந்தாண்டு அக்டோபர் 20ம் தேதி துவங்கும் என, டில்லி வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. ஆனால், குறித்த தேதி கடந்த பிறகும் மழை பெய்வதற்கான அறிகுறி தென்படவில்லை. தொடர்ந்து கடும் வெப்பநிலையே நிலவியது. கடும் வெயிலால் மக்கள் அவதிப்பட்டனர். கோடை காலம் கடந்தும், 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருந்தது. இந்நிலையில், நேற்றைய வானிலையில் திடீரென மாற்றம் ஏற்பட்டது. காய்ந்து கிடந்த சென்னை நகரில், நேற்று அதிகாலை குளிர்ந்த காற்றுடன் பல பகுதிகளில் மழை பெய்தது. சென்னை மட்டுமில்லாமல், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் பலத்த மழை பெய்தது. நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி, நுங்கம்பாக்கத்தில் 13 மி.மீ., மற்றும் மீனம்பாக்கம் 3 மி.மீ., மழை பெய்தது. இவ்வளவு நாளாக போக்குகாட்டிய பருவமழை, மிகவும் காலதாமதமாக துவங்கியுள்ளது. இதை, வானிலை ஆய்வு மைய அதிகாரிகளும் உறுதி செய்தனர்.

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி குழந்தைவேலு கூறியதாவது: பொதுவாக வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ம் தேதி துவங்கும். 1984, 1988, 1992, 2000 ஆகிய ஆண்டுகளில் நவம்பரில் பெய்தது. பருவநிலை மாற்றத்தின் காரணமாக, வடகிழக்குப் பருவமழை துவங்கும் அறிகுறி இன்றி காணப்பட்டது. தற்போது, பருவமழை துவங்கி விட்டது என்பதன் அடையாளமாக, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. வங்காள விரிகுடாவில், வலு குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இதனால், அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை மட்டுமின்றி வடமாவட்டங்களில் லேசான மழை பெய்யலாம். வங்காள விரிகுடாவில் இந்த காற்றழுத்தம் மேற்கொண்டு வலுவடைந்தால், பலத்த மழையை எதிர்பார்க்கலாம். பருவமழை தாமதமாக துவங்கினாலும், இந்தாண்டு வழக்கமான மழை அளவு இருக்கும். இவ்வாறு குழந்தைவேலு கூறினார்.

 

சட்டமன்றத் தேர்தல்களில் சிவசேனாவை தொடர்ந்து தோற்கடித்ததன் மூலம் மகாராஷ்டிராவை மக்கள் நரகத்துக்குள் தள்ளிவிட்டதாக அக் கட்சியின் தலைவர் பால் தாக்கரே புலம்பியுள்ளார்.

தனது மகன் உத்தவ் தாக்கரேவை வளர்த்து விடுவதற்காக உறவினரான ராஜ் தாக்கரேவை பால் தாக்கரே ஒதுக்கியதையடுத்து, அவர் கட்சியிலிருந்து விலகி மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா கட்சியைத் தொடங்கினார்.

சிவசேனாவின் மண்ணின் மைந்தர்கள் பட்டத்தைப் பறிக்க, வட இந்தியர்களுக்கு எதிராக பெரும் கலவரத்தை நடத்தினார்.

இந் நிலையில் கட்சியை தொடங்கி 2 ஆண்டுகளில் மக்களவைத் தேர்தலை சந்தித்த ராஜ், சிவசேனாவின் வாக்குளை சிதறடித்து மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வெல்ல வழி வகுத்தார்.

ஆனாலும் அவரை சிவசேனா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந் நிலையில் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அவரது கட்சி மாநிலம் முழுவதும் 5.5 சதவீத வாக்குகளை அள்ளியுள்ளது.

மும்பை, தானே உள்ளிட்ட சிவசேனையின் கோட்டை என்று கருதப்படும் இடங்களில் 23.5 சதவீத வாக்குகளை வென்றுள்ளது.

குறிப்பாக மும்பையில் சிவசேனா 4வது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது தான் பால் தாக்கரேவுக்கு விழுந்துள்ள மிகப் பெரிய அடியாகும்.

மொத்தத்தில் 13 தொகுதிகளில் மட்டுமே வென்றாலும் மேலும் 50 தொகுதிகளில் சிவசேனா-பாஜகவின் வாக்குகளை உடைத்து, காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெரும் வெற்றிக்கு வழி வகுத்துவிட்டது.

இதன்மூலம் சிவசேனாவுக்கு பெரும் போட்டியாக ராஜ் உருவெடுத்துவிட்டார். இனி அடு்த்த தேர்தலில் இவருடன் கூட்டடணி வைக்க பாஜக முயன்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவுக்கு பாஜகவையும் பல தொகுதிகளில் 3வது இடத்துக்கு தள்ளியுள்ளது இவரது கட்சி.

விமானங்களில் பறந்து புகைப்படும் எடுக்கும் (ariel photography) ‘ஹாபி’யைக் கொண்டவர் உத்தவ் தாக்கரே. யாரையும் மதிக்கவும் தெரியாது, தொண்டர்களை அரவணைக்கவும் தெரியாது. இவரை கட்சியின் செயல் தலைவராக்கியதில் இருந்தே சிவசேனா தேய ஆரம்பித்துவிட்டது.

அதே நேரத்தில் ராஜ் தாக்கரே, தொண்டர்களுடனேயே வாழும் அரசியல்வாதி. இதனால் பால் தாக்கரேவையும் மீறி சிவசேனா தொண்டர்கள் அவர் பக்கம் சாய்ந்து வருகின்றனர்.

15 ஆண்டுகளாக அடுத்தடுத்து சட்டமன்றம், மக்களவைத் தேர்தல்களில் தோல்வியைத் தழுவி வரும் சிவசேனா-பாஜக கலகலத்துப் போயுள்ளது.

இந் நிலையில் இன்று தனது சாம்னா பத்திரிக்கையில் பால் தாக்கரே எழுதியுள்ள கட்டுரையில்,

எதற்காக இந்த காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு மக்கள் மீண்டும் வாக்களித்திருக்கிறார்கள் என்று புரியவே இல்லை. அப்படி அவர்கள் என்ன செய்துவிட்டார்கள், தந்துவிட்டார்கள்?.

ஊழல், மின் வெட்டு, தீவிரவாதம் , நக்ஸல் தாக்குதல் , விவசாயிகள் தற்கொலை இது தானே கடந்த 15 ஆண்டுகளாய் நடந்து வருகிறது.

சிவசேனா-பாஜகவுக்கு மக்கள் தோல்வியைத் தந்ததன் மூலம் இந்த மாநிலத்தை நரகத்துக்குள் தள்ளிவிட்டுவிட்டனர்.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களைப் போல மக்களை பிரித்தாலும் சூழ்ச்சியை காங்கிரஸ் கடைபிடித்துள்ளது. மராட்டியர்களி்ன் வாக்குகளை (ராஜ் தாக்கரே மூலம்) பிரித்து ஆட்சிக்கு வந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

பிரமோத் மகாஜன் மகள் தோல்வி:

இந்தத் தேர்தலில் மேற்கு கட்கோபூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட மறைந்த பாஜக தலைவர் பிரமோத் மகாஜனி் மகள் பூனம் ராவ் படுதோல்வி அடைந்தார்.

பாஜகவின கோட்டையாகக் கருதப்பட்ட இந்தத் தொகுதியில், ராஜ் தாக்கரேவின் கட்சி வெற்றி பெற்றுவிட்டது.

ஜனாதிபதி மகன் வெற்றி:

காங்கிரஸ் சார்பில் அமராவதி தொகுதியில் போட்டியிட்ட ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் மகன் ராவ் ஷெகாவத் வெறும் 5,612 வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

ஜெர்மனியின் கோலென் நகரில் அக்டோபர் 23ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை தமிழ் இணைய மாநாடு நடைபெறுகிறது.

tamil2009 சிங்கப்பூரில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ இணைய மாநாட்டை போல இது வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ் கணிமை, தமிழ் இணையம் தொடர்பாக ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்களையும், எதிர்கொள்ள நேரும் சிக்கல்களையும் பற்றி உரையாடும் தொழில்நுட்பவியல் மாநாடாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் 100 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.

இத்தகைய தமிழ் இணைய மாநாடுகள் இதற்கு முன்பு சென்னை (1999, 2003), சிங்கப்பூர் (200,2004), கோலாலம்பூர் (2001), சான் பிரான்சிஸ்கோ (2002) ஆகிய நகரங்களில் நடைபெற்றுள்ளன. ஐரோப்பாவில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

மாநாடு நடக்கவிருக்கும் கோலென் பல்கலைக்கழகத்தின் இந்தியவில் மற்றும் தமிழியல் மையத்தின் ஒத்துழைப்போடு இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

பேராசிரியர்.உள்ரிகே நிக்கிலசு அவர்களின் தலைமையில் இயங்கும் இம்மையம் ஐரோப்பாவில் தமிழ் ஆய்வுக்கான தலைசிறந்த மையங்களில் ஒன்றாகும். இவ்வாய்வு நிறுவனத்திலுள்ள தமிழாசிரியரும் ஆய்வாளருமான முனைவர். தாமசு மால்ட்டன், இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் இலக்கியங்களை மின்வடிவேற்ற பெரும் முயற்சி செய்தவரும் தமிழார்வலர் குழுக்களில் பெரிதும் அறியப்பட்டவருமாவார்.

தமிழகத்துக்கு வெளியே 50,000 தமிழ் நூல்களுக்கு மேல் வைத்திருக்கும் ஒரே கல்வி நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினைகளில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதிக்காமல் ஒவ்வொரு மாநிலமும் தங்கள் இஷ்டத்துக்கு சட்டத்தை இயற்ற தொடங்கினால் மிகவும் கடுமையான விளைவுகள் ஏற்படும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் புதிய சட்டத்தை இயற்றியதன் மூலம் கேரள அரசு நீதித்துறையை மீறி நடந்து கொண்டுள்ளது என்று உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மதுரை உள்ளிட்ட ஐந்து தென் மாவட்டங்களின் உயிர் நாடியாக இருப்பது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையில் 142 அடியாக நீரைத் தேக்கி வைத்துக் கொள்ள கடந்த 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ம் தேதி தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

ஆனால் இதை ஒன்றும் இல்லாமல் ஆக்கும் விதமாக கேரள சட்டசபையில் புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்து விட்டனர். இதன் மூலம் அணையின் நீர்த் தேக்கம் 136 அடியாகவே நிரந்தரமாக இருக்கும் வகையில் மாற்றி விட்டது கேரளா.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே ஒன்றும் இல்லாமல் ஆக்கிய கேரளாவின் செயல் பெரும் விமர்சனத்துக்குள்ளானது. தற்போது முல்லைப் பெரியாறு அணையையே இடித்துத் தரைமட்டமாக்கி விட்டு புதிய அணை கட்ட கிளம்பி விட்டது கேரளா. இதற்கு ஜெய்ராம் ரமேஷை உடந்தையாக்கியுள்ளது கேரள அரசு.

இந்த நிலையில் கேரள அரசின் புதிய சட்டத்தை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு செய்தது.

இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஜெயின், முகுந்தகம் சர்மா, லோதா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.

கேரளாவின் சார்பில் ராஜீவ் தவான் ஆஜரானார். அவருக்கும் நீதிபதிகளுக்கும் இடையே கடும் வாதம் நடந்தது.

அந்த சூடான வாத விவரம்..

கேரளா – தமிழகம் அணையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள விரும்புகிறது. இது தண்ணீர் பிரச்சினையாக மட்டுமே இருக்குமானால் இதை பேசித் தீர்த்துக் கொள்வது கடினமல்ல.

கோர்ட் – அப்டியானால் உங்களது கவலை அணை மட்டும்தான் என்று எடுத்துக் கொள்ளலாமா..?

கேரளா- அணைக்கு அருகே புலிகள் சரணாலயம் உள்ளது. நீர்மட்டம் உயர்ந்தால், விலங்குகளுக்கு சிரமம் ஏற்படும். இது மனிதனால் கட்டப்பட்ட பாலம்தான். எனவே அணையின் பாதுகாப்பு குறித்து கேரள மக்களை எப்படி அரசால் திருப்திப்படுத்த முடியும்?

கோர்ட் – 2006, பிப்ரவரி 26ம் தேதி இந்த கோர்ட் பிறப்பித்த தீர்ப்புக்கு முன்பும் கூட இந்த கவலைகள் இருந்தன. ஆனால் எங்களது தீர்ப்புக்கும், உங்களது சட்டத் திருத்தத்திற்கும் இடையிலான அந்த 15 நாட்களில் ஏதோ ஒரு முக்கியமான நிகழ்வு நடந்திருக்கும் என நாங்கள் கருதுகிறோம்.

கேரளா – அப்படியெல்லாம் எதுவும் இல்லை.

கோர்ட் – அப்படியானால், அணையின் பாதுகாப்பு தான் உங்களது கவலையா?

கேரளா – தொடர்ந்து அணையைக் கண்காணிக்க வேண்டும் என்பதுதான் எங்களது கவலை.

கோர்ட் – நீங்கள் நீதித்துறையை மீறும் வகையில் நடந்து கொள்கிறீர்கள்.

நீதிபதி ஜெயின் – கோர்ட் அணையின் உயரம் குறித்து ஒரு நிர்ணயம் செய்தது. ஆனால் நீங்கள் 136 அடிதான் என்றீர்கள். அவர்கள் (தமிழ்நாடு) 152 அடி கேட்டார்கள். இரண்டுக்கும் இல்லாமல் 142 அடி என்று நாங்கள் சொன்னோம். ஆனால் நீங்கள் 136 அடிதான் என்று கூறி சட்டத்தை இயற்றி விட்டீர்கள். சட்லெஜ் யமுனை இணைப்புக் கால்வாய் குறித்த பஞ்சாபின் சட்டத்தைப் பார்த்தீர்களா. பிறகு கோர்ட்டின் புனிதத் தன்மை என்ன ஆவது..

கேரளா – நாட்டிலேயே மிகவும் பழமையான அணை இது.

தமிழக வழக்கறிஞர் பராசரன் – இதை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.

கோர்ட் – மீண்டும் அதே பிரச்சினையைத்தான் எழுப்புகிறீர்கள். இந்தப் பிரச்சினைகள் எல்லாம் 2006 தீர்ப்புக்கு முன்பும் எழுப்பப்பட்டவைதான். அணையை வலுவானதாக வைத்துக் கொள்ள உங்களுக்கு என்னதான் செய்ய வேண்டும். ஏதாவது ஒரு திட்டத்தை ஏற்படுத்தலாம். சொல்லுங்கள், உங்களது நிலைதான் என்ன…

பராசரன் – கேரளாவின் நோக்கமே இந்த அணையை இல்லாமல் செய்வது மட்டும்தான். புதிய அணையை கட்ட அவர்கள் விரும்புகிறார்கள். அணையை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள நினைக்கிறார்கள். புதிய அணை மட்டுமே அவர்களது ஒரே நோக்கம்.

mperiyarகேரளா- சுயேச்சையான முறைப்படுத்தும் ஆணையம் ஒன்றை அமைக்கலாம். அதுதான் பிரச்சினையைத் தீர்க்கும் என்றால் அது சாத்தியம்தான் என்றார்.

இதையடுத்து வருகிற செவ்வாய்க்கிழமைக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அடுத்த பக்கம் »